சென்னை: பாகுபலி 2 படத்தில் தான் ஒதுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார். உலக அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடித்திருந்தனர் .
இப்படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி 2 படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூலை குவித்தது. இப்படத்தில் தமன்னா, முதல் பாகத்தை போல இல்லாமல் குறைந்த காட்சிகளிலேயே இருந்தார்.
இதனால் இயக்குனர் ராஜமௌலிக்கும் தமன்னாவுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் இடம் பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை குறித்து நடிகை தமன்னா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘ சரித்திரப் படத்தில் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி.
இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது, என் கதாபாத்திரத்துக்கு இரண்டாவது பாகத்தில் நடிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் முதல் பாகம் மெஹா ஹிட்டானதால், அடுத்த பாகத்திலும் நான் நடிக்க வேண்டிய தேவையிருந்தது. அதனால் தான் சில காட்சிகளில் இருந்தேன்.’ என்றார்.
பாகுபலி 2 படத்தில் ஒதுக்கப்பட்டேனா : தமன்னா விளக்கம்!
பாகுபலி 2 படத்தில் தான் ஒதுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார். உலக அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடித்திருந்தனர் .
Samayam Tamil 1 Mar 2019, 3:26 pm
ஹைலைட்ஸ்:
- இயக்குனர் ராஜமௌலிக்கும் தமன்னாவுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் இடம் பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.