ஆப்நகரம்

மீண்டும் ‘பாகுபலி’ மூன்று பாகங்களாக உருவாகிறது!

‘பாகுபலி’ மீண்டும் மூன்று பாகங்களாக இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவுள்ளது.

Samayam Tamil 5 Jul 2018, 4:56 pm
‘பாகுபலி’ மீண்டும் மூன்று பாகங்களாக இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவுள்ளது.
Samayam Tamil sivagami


இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படங்கள் ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’. இந்த இரு படங்களிலும் சிவகாமி கேரக்டரில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த சிவகாமி கேரக்டர் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது என்பது தெரிந்ததே. அந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த இயக்குனர் ராஜமௌலி, சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் ஒன்றை மூன்று பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளார்.

சிவகாமியின் சிறுவயது சாகசம், திருமணம், மற்றும் அவர் சிறுவயதிலேயே கலந்து கொண்ட போர் ஆகியவை குறித்து திரைப்படமாக இயக்கவுள்ளார். ஆனால் இந்த படம் தியேட்டரில் வெளியாகாது என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக இந்த படங்களை ராஜமௌலி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்தப் படத்தில் சிவகாமியாக ரம்யாகிருஷ்ணனும், கட்டப்பாவாக சத்யராஜும் மீண்டும் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ராஜமௌலி மற்றும் தேவகட்டா ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்