ஆப்நகரம்

வெள்ளித்திரையில் மீண்டும் ‘பாகுபலி’ முதல் பாகம்!

‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் மீண்டும் வரும் 7ம் தேதி வெள்ளித்திரையில் திரையிடப்படுகிறது.

TNN 3 Apr 2017, 1:16 pm
‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் மீண்டும் வரும் 7ம் தேதி வெள்ளித்திரையில் திரையிடப்படுகிறது. இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ள ‘பாகுபலி’2’ படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ‘பாகுபலி’ முதல் பாகத்தை தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் மீண்டும் திரையிட உள்ளன.
Samayam Tamil baahubali will release first for baahubali 2
வெள்ளித்திரையில் மீண்டும் ‘பாகுபலி’ முதல் பாகம்!


இந்த முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு காரணமாக 2ம் பாகத்தைப் காண்பதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாகுபலி’ படத்தின் 2ஆம் பாகத்தின் டிரைலர் யு ட்யூபில் கிட்டத்தட்ட 10 கோடி ஹிட்ஸை எட்டியுள்ளது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் வெளியாகும்

இப்படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் வாங்கியிருக்கிறார். ‘பாகுபலி-2’ ஹிந்தி டப்பிங்கை பெரிய விலை கொடுத்து வாங்கியதால் படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்கியே தீரவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

அதில் ஒரு முயற்சியாக, ‘பாகுபலி’யின் முதல் பாகத்தின் கதையை ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்காக, அப்படத்தை வரும் 7ஆம் தேதி வட இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவிருப்பதாக கரண் ஜோஹர் அறிவித்துள்ளார். இந்தியில் கரன்ஜோஹர் வெளியிடுவதை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தை மீண்டும் வெளியிடப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்