ஆப்நகரம்

”என்னவளே..” பாடலை பாடிய கிராமத்து பெண்ணுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த கவுரவம்

காதலன் படத்தில் இடம்பெற்றுள்ள “என்னவளே..” பாடலை பாடி இணையத்தில் வைரலான கிராமத்து பெண்ணை பாராட்டி, ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 16 Nov 2018, 5:12 am
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியை சேர்ந்தவர் பேபி. இவர், அப்பகுதி மக்களிடையே கிராமிய பாடல்கள், சினிமா பாடல்களை பாடி வந்துள்ளார்.
Samayam Tamil rahman
கிராமத்து பெண்ணுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வழங்கிய கௌரவம்


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்களை இவர் பாடியது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடல்களை அவர் பாடும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலான நிலையில், அதனை பார்த்த தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் கோடேஸ்வர ராவ், பேபிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பெண்மணிபாடும் வீடியோ பதிவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திறமை எங்கு இருந்தாலும், அதற்கான வாய்ப்பு நிச்சயம் அமையும் என்பதற்கு இந்த பெண்மணியே ஒரு சான்று.

அடுத்த செய்தி

டிரெண்டிங்