ஆப்நகரம்

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ தள்ளிப் போக பைரவா காரணமா?

ஜனவரி 12ம் தேதி வெளியாக வேண்டிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் ‘பைரவா’ தாக்கத்தை சமாளிக்க முடியாததால் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

TOI Contributor 30 Dec 2016, 3:52 pm
ஜனவரி 12ம் தேதி வெளியாக வேண்டிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் ‘பைரவா’ தாக்கத்தை சமாளிக்க முடியாததால் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil bairavaa is the reason behind to postponed kotitta idangkalai nirappuka
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ தள்ளிப் போக பைரவா காரணமா?


பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ படத்தை தயாரித்த பட நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. என்றாலும் அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ படத்தைப்போலவே மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருந்த ஆர். பார்த்திபன் க்ரவுட்ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கியிருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. இந்தப்படத்தில் தனது குருநாதர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை கதாநாயகனாக்கியிருக்கிறார் பார்த்திபன். சாந்தனுவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என பார்த்திபன் முதலில் அறிவித்தார்.

பின்னர் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘பொங்கலுக்கு வருகிறோம்’ என்ற வாசகங்களுடன் கூடிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பைரவா வெளியாகும் ஜனவரி 12 ஆம் தேதி அன்றே ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பொங்கலுக்கு ‘பைரவா’ படத்துடன் ஏற்கெனவே 6 படங்கள் மோதுகின்றன. இந்நிலையில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படமும் ஓடினால் சரிப்பட்டு வராது என்று நினைத்து படத்தின் வெளியீட்டு தேதியை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்