ஆப்நகரம்

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்காக காத்திருக்கும் பெங்களூர் மக்கள்: வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்!

பெங்களூர் மக்கள் ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்காக காத்திருக்கிறார்கள் என்று வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ். கூறியுள்ளார்.

Samayam Tamil 4 Oct 2018, 4:08 pm
கதிர், ஆனந்தி, யோகி பாபு உட்பட பலர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த விஜய், கமல் உட்பட பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Samayam Tamil pari


இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்துக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்களின் பேராதரவால் நடந்துள்ளதாக பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை ரீடுவிட் செய்துள்ள வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் “ரஞ்சித், அப்படியே பெங்களூர் பக்கமும் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க. காத்திருப்பு மன அழுத்தத்தையும் கோபத்தையும் உண்டாக்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்