ஆப்நகரம்

'யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல்' நயன்தாரா கல்யாணம் நடந்துள்ளது... சாடிய பிரபல நடிகர்!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல் ஆடம்பரமாக நடந்துள்ளதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Samayam Tamil 10 Jun 2022, 5:11 pm
சினிமா நடிகர்கள் நடிகைகள் தொடர்பான செய்திகளை வைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். அவர் வெளியிடும் வீடியோக்களில் பெரும்பாலும் நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களே இருக்கும்.
Samayam Tamil Nayanthara


நடிகைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசுகிறார் என அவர் மீது திரைத்துறையினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் அசராத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் பயில்வான் ரங்கநாதன். அப்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் 25 கோடி ரூபாய்க்கு ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டு யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகைகள் குறித்து பேசுவேன் என அதிரடியாக கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன் என்றும் விடாப்பிடியாக கூறியுள்ளார். அதோடு நடிகர் நடிகைகள் குறித்து தான் பேசுவரை கேட்க 3 லட்சம் பேர் உள்ளார்கள்.

நடிகர் நடிகைகள் குறித்து பேசுமாறு பொதுமக்கள் முதல் போலீஸ் வரை சொல்கிறார்கள் என அசராமல் கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் குறித்து அவதூறாக பேசக்கூடாது என பாடகியும் பிக்பாஸ் பிரபலமுமான சுசித்ரா அண்மையில் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்