ஆப்நகரம்

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்திற்கான பின்னணி என்ன..?: பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்!

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 19 Jan 2022, 10:51 am
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்துள்ளதுதான் தற்போதையை கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக உள்ளது. நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்களின் திடீர் பிரிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Dhanush - Aishwarya
Dhanush - Aishwarya


இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக நேற்று முன்தினம் இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்..

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில், '18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம்.

நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு: போலீசார் அதிரடி நடவடிக்கை!
இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தற்போது பத்திரிக்கையாளராக திகழும் பயில்வான் ரங்கநாதன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு குறித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில் அவர் கூறும் போது, தனுஷ் தி கிரே மேன் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றபோது அவருடன் ஐஸ்வர்யா, இரண்டு மகன்களும் சென்றனர். ஆனால் ஐஸ்வர்யா அங்கிருந்து பாதியிலே மகன்களை தனுஷுடன் விட்டுவிட்டு கிளம்பிவிட்டார். அப்போதிலிருந்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியதாக தெரிவித்துள்ளார்.

இதனாலே ஐஸ்வர்யா பாதியிலே அமெரிக்காவில் இருந்து கிளம்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்