ஆப்நகரம்

படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் சினிமா வாய்ப்பு : மலையாள நடிகை ஹிமாசங்கர் பேட்டி

மலையாள பட உலகில் படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் நடிகை ஹிமாசங்கர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

TNN 11 Aug 2017, 9:20 pm
மலையாள பட உலகில் படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் நடிகை ஹிமாசங்கர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
Samayam Tamil bed with acting exists in malayalam cinema hima shankar
படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் சினிமா வாய்ப்பு : மலையாள நடிகை ஹிமாசங்கர் பேட்டி


பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மலையாள நடிகர்கள் அணி, நடிகைகள் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளது.

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு எதிராக நடிகைகள் தனி சங்கம் உருவாக்கியுள்ளனர்.

இப்பிரச்னைக்கு பதிலளித்த நடிகர் சங்க தலைவர் இன்னசெண்ட் கருத்து தெரிவிக்கும் போது, நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுவதில்லை. ஒரு சில நடிகைகள் வாய்ப்புக்காக அப்படி செய்வதாக சர்ச்சை கருத்து கூறியிருந்தார். இதுகுறித்து நடிகைகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொச்சியில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஹிமா சங்கர் பேசியதாவது:
நான் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படிக்கும் போதே மலையாள சினிமா உலகை சேர்ந்த 2 பேர் என்னை சந்தித்து பேசும் பேசினர். அப்போது அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என கூறினர். அப்போது அவர்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. அதன் பின் அவர்களே அதனை விவரித்து கூறிய போது அதிர்ச்சி அடைந்தனர். அப்படிப்பட்ட பட வாய்ப்புகள் எனக்கு தேவையில்லை என கூறி அனுப்பிவிட்டேன்.

பெண்கள் சந்தித்த பிரச்னை குறித்து வெளியே கூறும் போது, உடனே அவர் மீது பலரும் பாய்ந்துவிடுகின்றனர் என கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்