ஆப்நகரம்

எஸ்பிபி-க்கு பாரதிராஜா இறுதி அஞ்சலி, கண்ணீர் விட்டு அழுத மனோ

எஸ்பி பாலசுப்பிரமணியம் உடலுக்கு பாரதிராஜா, மனோ ஆகியோர் நேரில் அஞ்சல் செலுத்தி இருக்கின்றனர்.

Samayam Tamil 26 Sep 2020, 9:58 am
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் இன்று முழு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரபலங்கள் மற்றும் சினிமா துறை நட்சத்திரங்கள் பலரும் வந்து கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil Bharathiraja pay last respect to SPB


இயக்குனர் பாரதிராஜா மற்றும் அவரது மகன் மனோஜ் இருவரும் நேரில் வந்து எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். எஸ்பிபி மருத்துவமனையில் இருந்தபோது அவர் குணமடைய வேண்டி பாரதிராஜா கூட்டு பிரார்த்தனை நடத்தினார். நேற்றும் எஸ்பிபி-யை பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்த அவர் மிக உருக்கமாக செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். இன்று எஸ்பிபி யின் உடலுக்கு பாரதிராஜா தன் இறுதி அஞ்சலியை நேரில் சென்று செலுத்தி இருக்கிறார்.


மேலும் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த வந்த பாடகர் மனோ, எஸ்பிபி உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்