ஆப்நகரம்

எஸ்பிபி நலம் பெற நாளை கூட்டு பிரார்த்தனை.. பாரதிராஜா, முருகதாஸ் அழைப்பு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டி நாளை மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

Samayam Tamil 19 Aug 2020, 5:47 pm
இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் சினிமா நட்சத்திரங்களையும் அதிகளவில் பாதித்து வருகிற.து பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து critical நிலையில் இருப்பதால் தொடர்ந்து ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருக்கிறார். இருப்பினும் அவரது உடல் நிலை சீராக இருந்து வருகிறது என்று மருத்துவர்கள் கடந்த சில தினங்களாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.
Samayam Tamil Bharathiraja to organise a mass prayer for SPB


இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டுமென சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்த், கமல் ஹாசன், இளையராஜா பாரதிராஜா என பலர் பதிவிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டி ஒரு கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. இது கொரோனா காலகட்டம் என்பதால் இதை அவரவர் வீட்டிலிருந்தே செய்ய இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்திருக்கிறார். நாளை (ஆகஸ்ட் 20) மாலை 6 மணி முதல் 6.05 வரை இது நடைபெறும் என அவர் கூறியிருக்கிறார்.

இதில் பங்கேற்கும்படி சினிமா துறையினர் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இது பற்றி பாரதிராஜா பதிவிட்டு இருக்கும் வீடியோவில், "மொழி வேறுபாடு இல்லாமல், இன வேறுபாடு இல்லாமல், பொதுக் கலைஞனுக்காக நாம் பிரார்த்திக்கின்றோம். நாளை மாலை 6 மணிக்கு ஒரு நிமிடம் மௌன பிரார்த்தனை, உடன் அவர் பாடிய பாடலை ஒலிபரப்பவும். அந்த பாடலில் அவர் எழுந்து வருவார். மறுபடியும் அவரது குரல் ஒலிக்கும். இந்தியாவில் மட்டுலல்ல, உலகம் முழுவதும் பல்லாயிரக்கனான பாடல்களை அவர் பாடுவார். நம் எதிர்கால சந்ததியும் அதை கேட்டு மகிழும். தயவு செய்து அனைவரும் இதை கடைபிடியுங்கள். நாளை மாலை 6 மணிக்கு" என கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

அந்த ட்விட்டில் அவர் விஜய், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் உட்பட தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களையும் டேக் செய்து உள்ளார்.


இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பதிவிட்டிருக்கும் ட்விட்டில் "பாடகர் எஸ்பிபி அவர்கள் வேகமாக குணமடைய நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரார்த்தனை செய்வோம். 20 ஆகஸ்ட் மாலை 6 மணிக்கு நடக்கும் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள். அவர் குரல் மீண்டும் ஒலிப்பதை உறுதி செய்வோம். #GetWellSoonSPBSIR" என பதிவிட்டு இருக்கிறார்.


முன்னணி இயக்குனர் முருகதாஸும் இது பற்றி பதிவு செய்திருக்கிறார். "நம் குழந்தை பருவத்தில் இருந்தே மகிழ்ச்சி மற்றும் சந்தோசத்தை அளித்து வருபவர் அவர். அவருக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரார்த்தனை செய்வோம்" என முருகதாஸ் குறிப்பிட்டு இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்