ஆப்நகரம்

திறமையால் தலைவரான ஹரீஷ் கல்யாண்: பதவி பறிபோன சோகத்தில் பிந்து!

தன்னுடைய தலைவி பதவி பறிபோன சோகத்தில் பிந்து மாதவி இருந்து வருகிறார்.

TNN 22 Aug 2017, 6:45 am
தன்னுடைய தலைவி பதவி பறிபோன சோகத்தில் பிந்து மாதவி இருந்து வருகிறார்.
Samayam Tamil big boss tamilharish kalian become leader bindu feel unhappy
திறமையால் தலைவரான ஹரீஷ் கல்யாண்: பதவி பறிபோன சோகத்தில் பிந்து!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிந்து மாதவியின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், புது வரவுகளான ஹரீஷ் கல்யாண், சுஜா வருணி மற்றும் காஜல் ஆகியோருக்கு அடுத்த தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது. மிகவும், ஜாலியான இந்த போட்டியில் முட்டிக்கு நடுவில் பந்தை வைத்துக்கொண்டு வளையத்திற்குள் போட வேண்டும். இது தான் தலைவர் பதவிக்கான டாஸ்க். இதில், புது வரவு ஹரீஷ் கல்யாண் எளிதாக தன்னுடைய திறமையால் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.



ஆனால், ஹரீஷ் தலைவரானதால் தன்னுடைய தலைவி பதவி போய்விட்டது என்று வருத்தமடைந்துள்ளார். இதன் பிறகு மற்றொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில், வெற்றி நிச்சயம் என்ற டாஸ்க்கில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் தான் வெற்றி பெறுவேன் என்றும், அதற்குரிய காரணங்களும் ஒவ்வொருவராக தெரிவிக்க வேண்டும். இதையடுத்து வெற்றி நிச்சயம்-2 டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு யார் பிரபலம் அடைவார்கள், யார் வருத்தப்படுவார்கள் என்று அனைவரும் மற்றவர்களைப் பற்றி தெரிவிக்க வேண்டும். இதில், பெரும்பாலும், கணேஷ் வெளியேறிய பிறகு பிரபலமடையலாம் என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்