ஆப்நகரம்

அமிதாப் பச்சனின் வீட்டு சுவரை தாண்டிய தீவிர ரசிகரால் பரபரப்பு

பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர், பிக் பி-யை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ரசிகரை போலீசார் கைது செய்தனர்.

TNN 1 Aug 2016, 6:52 pm
மும்பை: பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர், பிக் பி-யை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ரசிகரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil big bs die hard fan scaled bungalow wall to meet the actor
அமிதாப் பச்சனின் வீட்டு சுவரை தாண்டிய தீவிர ரசிகரால் பரபரப்பு


மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் 'ஜல்சா பங்களா'-வின் மதில் சுவர் தாண்ட முயன்ற தீவிர ரசிகரால் பரபரப்பு நிலவியது. பன்வாரிலால் யாதவ்(23), தனது பாடல் திறனை பிக் பி அமிதாப் பச்சனிடம் காண்பிக்க முயன்று தவறான செயலில் ஈடுபட்டதால் ஜூஹு போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். A resident of Pune, the trespasser identified as Bullet Yadav intended to sing a Bhojpuri song for Amitabh Bachchan. — ANI (@ANI_news) August 1, 2016 இது குறித்து தகவல் தெரிவித்த ஜூஹூ போலீஸ் அதிகாரி, புனேவில் இருந்து அமிதாப் பச்சனை காண வந்த யாதவ், கடந்த 5 நாட்களாக அமிதாப்பின் வீட்டை சுற்றி வந்துள்ளார். எப்படியாவது அவரை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த யாதவ், ஒரு கட்டத்தில் பிக் பி-யின் வீட்டு சுவரை தாண்டி உள்ளே குதிக்க முயன்றுள்ளார். Mumbai police books a person under IPC 447 for criminal trespass after he tried to enter Amitabh Bachchan's residence in Juhu. — ANI (@ANI_news) August 1, 2016 இதனை பார்த்த அமிதாப்பின் சமையல்காரர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளைஞர் யாதவ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்