ஆப்நகரம்

மஹத் என்னை ஏமாற்றிவிட்டார்: யாசிகா!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகை யாசிகாவிடம், ‘நான் உன்னை மனதார காதலிக்கிறேன்’ என்று கூறிய நடிகர் மஹத், தற்போது என்னை ஏமாற்றி விட்டதாக நடிகை யாசிகா குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 5 Oct 2018, 1:13 pm
பிக்பாஸ் வீட்டில் இரு காதல் ஜோடிகள் உருவானது. அது ஐஸ்வர்யா - ஷாரிக், மற்றொன்று யாஷிகா - மஹத். இந்த ஜோடிகளின் காதல் எப்படி உள்ளே உருவானதோ அதே போல் உள்ளேயே அழிந்தும் போனது. இந்த காதல், வீட்டினுள் நடிகர் ஹரிஷ் கல்யாண் வந்த போது தான் தீவிரமடைந்தது. ஏனெனில் அவர் தான் இவர்களுக்குள் இருந்த காதலை வெளிப்படுத்தினார்.
Samayam Tamil mahat yashika1


மஹத்திற்கும் யாசிகாவிற்கும் இடையே நட்பை தவிர வேறு உள்ளது என அவர் சொன்னதற்கு மஹத்தை தவிர மற்ற அனைவரும் யெஸ் என ஒத்து கொண்டனர். இதனால் மனமுடைந்த யாசிகா கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.

தற்போது பிக்பாஸ் முடிந்து வெளியே வந்துள்ள யாசிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். அதில், ‘‘மஹத் அப்படி செய்வான் என நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் ஹரிஷ் வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் தான் நான் உன்னை மனதார காதலிக்கிறேன் என்றார். சரி எப்படியோ அவர் வெளியே இருந்து பிராச்சிக்காக தான் இப்படி செய்து இருப்பான் என நம்புகிறேன்’’ என்றார் யாசிகா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்