ஆப்நகரம்

இந்தவாரம் வெளியேறப்போவது ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்த்!

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்தாம்.

Samayam Tamil 22 Sep 2018, 1:44 pm
பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்தாம்.
Samayam Tamil yashika1


பிக்பாஸ் சீசன் 2 கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் இரண்டு மாதம் இந்த நிகழ்ச்சி டல்லடித்தது. மூன்றாவது மாதத்தில் இருந்து சூடுபிடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து வீட்டிற்குள் போட்டியாளர்களிடம் பல்வேறு பிரச்னைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசன் 2 முடியது இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.

ஜனனி ஐயர் நேரடியாக பைனல் சென்றுவிட்டதால் மற்ற போட்டியாளர்கள் பைனல் செல்ல முயன்றுவருகின்றனர். அதிலும் ஐஸ்வர்யா மிக மோசமாக பல விஷயங்கள் செய்துவருகிறார். நேற்று முதல் அவர் மற்ற போட்டியாளர்களை தாக்கும் அளவுக்கு கூட துணித்து அடிதடி செய்துவருகிறார்.

இந்நிலையில் இந்த வாரமாவது அவர் வெளியேற்றப்படுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளாராம்.
விஜயலக்ஷ்மி, பாலாஜி ஆகியோர் வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்த் வெளியேற்றப்படவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்