ஆப்நகரம்

Bigg Boss: பலருக்கும் வேலை வாங்கித் தரும் கம்பெனியை நடத்தி வரும் பிக்பாஸ் ஐஸ்வர்யா!

பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா, பலருக்கும் வேலை வாங்கித் தரும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறாராம்.

Samayam Tamil 26 Jul 2018, 5:08 pm
பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா, பலருக்கும் வேலை வாங்கித் தரும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறாராம்.
Samayam Tamil பலருக்கும் வேலை வாங்கித் தரும் கம்பெனியை நடத்தி வரும் பிக்பாஸ் ஐஸ்வர்யா!


நடிகை ஐஸ்வர்யா தத்தா, தற்போது பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார். இவர் மஹத்திடமும், ஷாரியிடமும் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது. பிக்பாஸ் ஆரம்ப முதலே இவர் மீது பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இருந்தாலும் இவர் இன்னும் வெளியேறாமல் பிக்பாஸ் வீட்டிலே இருந்து வருகிறார். அதற்கான காரணம் பிக்பாஸுக்கு மட்டுமே தெரியும்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத உண்மை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் 2015ல் வெளியானது. அதன் பின் அவர் துபாய் சென்றார். அங்கு 2016ல் ஒரு கம்பெனியை தொடங்கினார்.

வேலைக்காக இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு உதவிடும் வகையில் ‘மேன் பவர் கன்சல்டன்ஸி’ ஒன்றை நிறுவி அதன் மூலம் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்து வருகிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்