ஆப்நகரம்

கல்லூரி பெண்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக்பாஸ் ஆரவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ், பொங்கல் தினத்தை சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் மாணவிகளுடன் கொண்டாடினார்

Samayam Tamil 13 Jan 2018, 2:44 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ், பொங்கல் தினத்தை சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் மாணவிகளுடன் கொண்டாடினார்.
Samayam Tamil bigg boss fame aarav celebrated pongal with college girls in chennai
கல்லூரி பெண்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக்பாஸ் ஆரவ்!


மாடலாக இருந்த ஆரவ், கமல் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை வென்றதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இதையடுத்து, ஆரவ் பெயரிடப்படாத படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆரவ், மாணவிகளுடன் மாட்டு வண்டியில் பயணித்து பொங்கலை குதூகலமாக கொண்டாடினார்.

இந்தப் பொங்கல் நிகழ்ச்சியில் ஆரவ் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையும், மாணவிகள் சேலையும் அணிந்து விழாவைச் சிறப்பித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்