ஆப்நகரம்

தன் தவறை உணர்ந்து பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்ட சென்ட்ராயன்!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த சென்ட்ராயன், முதலில் தன் பெற்றோர்களிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

Samayam Tamil 10 Sep 2018, 1:42 pm
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த சென்ட்ராயன், முதலில் தன் பெற்றோர்களிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
Samayam Tamil sendrayan


நேற்று நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், நடிகர் சென்டராயன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் வெகுளியாக இருந்தவர் அவர் மட்டுமே. பிக்பாஸ் நிகழ்ச்சியால் சென்டராயனுக்கு அதிக ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த சென்ட்ராயன், முதல் வேலையாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த தனது அப்பா, அம்மாவை கட்டியணைத்து கண்ணீர் விட்டார்.

கண்ணீர் மல்க பேசிய நடிகர் சென்ட்ராயன், “பிக்பாஸ் வீட்டிலிருந்து தற்போது நான் புது மனிதனாக வந்துள்ளேன். இதற்குமுன் பல தவறுகள் செய்துள்ளேன். பெற்றோர்களை திட்டியிருக்கேன், சில நேரங்களில் அவர்களை அடித்திருக்கேன். இப்போது தான் தெரிகிறது அதெல்லாம் தவறு என்று” என கூறினார்.

மேலும் தான் இதற்குமுன் சென்ட்ராயன், தனது அம்மா, அப்பாவை அடித்திருப்பதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் சென்ட்ராயன் கண்ணீருடன் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்