பெண்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் தாலி எல்லாம் அவசியம் இல்லை என பிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றம் இந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழியில் இருக்கும் சினிமா பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து நிகழ்ச்சியை வழங்கி வருகின்றார். நாளை 3வது சீசன் தொடங்க உள்ளது.
தாலி தேவையில்லை:
பிக்பாஸ் தமிழ் 2வது சீசனில் கலந்து கொண்டவர் வானொலி தொகுப்பாளர் வைஷ்ணவி. கடந்த சீசனில் பார்வையாளர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா. அவரைத் தொடர்ந்து அடுத்த நிலையில் இருப்பவர் வைஷ்ணவி. மற்ற போட்டியாளர்கள் குறித்து அதிகமாக புறம் பேசுவதாக வெறுக்கப்பட்டார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னரே ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் அஞ்சன் என்ற விமானியை காதலித்தார். அவரோடு லிவ்விங் டுகெதராகவும் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஞ்சனை திருமணம் செய்துகொண்டார்.
அவர் பதிவிட்டுள்ள போஸ்டில், “தாலி கட்டிகொள்ளவில்லை, மோதிரங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு தங்கம், வைரம் என எந்த ஒரு ஆபரணத்தையும் வாங்கவில்லை. திருமணத்தின் போது கவரிங் நகை தான் அணிந்திருந்தேன். மேக்கப் கூட நானே போட்டுக் கொண்டேன்.” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஒருவர் தாலி அணிவதால் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றது.நம்முடைய முன்னோர்கள் உடல் நலத்திற்காக இந்த நடைமுறையை வைத்துள்ளனர். தாலி ஒன்றும் அலங்கார பொருள் கிடையாது என பதிவிட்டிருந்தார்.
அதற்கு ரிப்ளை செய்துள்ள வைஷ்ணவி, “எந்த விதத்தில் தாலி ஆரோக்கியமானது என தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளதோடு, இப்போதெல்லாம் தங்க நகை, தாலி அணிவது நகை பறிப்பாளர்களுகளால் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது” என தெரிவித்துள்ளார்.
வைஷ்ணவியின் பதிவு பலரையும் கேலி, கிண்டல், விமர்சனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவின் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றம் இந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழியில் இருக்கும் சினிமா பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து நிகழ்ச்சியை வழங்கி வருகின்றார். நாளை 3வது சீசன் தொடங்க உள்ளது.
தாலி தேவையில்லை:
பிக்பாஸ் தமிழ் 2வது சீசனில் கலந்து கொண்டவர் வானொலி தொகுப்பாளர் வைஷ்ணவி. கடந்த சீசனில் பார்வையாளர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா. அவரைத் தொடர்ந்து அடுத்த நிலையில் இருப்பவர் வைஷ்ணவி. மற்ற போட்டியாளர்கள் குறித்து அதிகமாக புறம் பேசுவதாக வெறுக்கப்பட்டார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னரே ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் அஞ்சன் என்ற விமானியை காதலித்தார். அவரோடு லிவ்விங் டுகெதராகவும் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஞ்சனை திருமணம் செய்துகொண்டார்.
அவர் பதிவிட்டுள்ள போஸ்டில், “தாலி கட்டிகொள்ளவில்லை, மோதிரங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு தங்கம், வைரம் என எந்த ஒரு ஆபரணத்தையும் வாங்கவில்லை. திருமணத்தின் போது கவரிங் நகை தான் அணிந்திருந்தேன். மேக்கப் கூட நானே போட்டுக் கொண்டேன்.” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஒருவர் தாலி அணிவதால் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றது.நம்முடைய முன்னோர்கள் உடல் நலத்திற்காக இந்த நடைமுறையை வைத்துள்ளனர். தாலி ஒன்றும் அலங்கார பொருள் கிடையாது என பதிவிட்டிருந்தார்.
அதற்கு ரிப்ளை செய்துள்ள வைஷ்ணவி, “எந்த விதத்தில் தாலி ஆரோக்கியமானது என தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளதோடு, இப்போதெல்லாம் தங்க நகை, தாலி அணிவது நகை பறிப்பாளர்களுகளால் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது” என தெரிவித்துள்ளார்.
வைஷ்ணவியின் பதிவு பலரையும் கேலி, கிண்டல், விமர்சனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.