ஆப்நகரம்

பிக்பாஸ் பரிசுத் தொகையை இதுக்காக பயன்படுத்திய ஆரவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை நடிகர் ஆரவ் இதற்காக பயன்படுத்தியுள்ளாராம்.

TNN 29 Dec 2017, 4:42 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை நடிகர் ஆரவ் இதற்காக பயன்படுத்தியுள்ளாராம்.
Samayam Tamil bigg boss title winner arav used his money for ngo
பிக்பாஸ் பரிசுத் தொகையை இதுக்காக பயன்படுத்திய ஆரவ்!


பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் சில பிரபலங்களும், அமைப்புகளும் எதிர்ப்புகாட்டி வந்தனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சில பேருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிக்பாஸ் டைட்டிலை வென்ற நடிகர் ஆரவ் கூட தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பணத்தை இவ்வாறாக பயன்படுத்தினேன் என்று நடிகர் ஆரவ் கூறியுள்ளார். ‘‘அந்த பணத்தை வைத்து திருநெல்வேலியில ஒரு என்.ஜி.ஓ தொடங்கியிருக்கேன். தமிழ்நாட்டில் எந்தவொரு தேவை இருந்தாலும் இந்த என்.ஜி.ஓ அந்த இடத்துல உள்ள மக்களுக்கு உதவி செய்யும்.

ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுறதுதான் இந்த அமைப்போட நோக்கம். மதம், இனம், மொழி கடந்து இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்ற குறிக்கோள் வைத்திருக்கோம்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்