ஆப்நகரம்

பள்ளி பருவத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்: பிக்பாஸ் விஜயலட்சுமி!

சிறு வயதில் நான் கராத்தே கிளாஸிற்கு சென்றபோது அங்குள்ள மாஸ்டர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்று பிக்பாஸ் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

Samayam Tamil 10 Oct 2018, 3:55 pm
சமீப காலமாக உலகம் முழுவதும் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் நடந்து வருகிறது. குறிப்பாக சினிமா நடிகைகள்தான் இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது அவர்கள் சினிமா வாய்ப்பு கேட்டு போகும் போது, தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது தைரியமாக வெளியே பேசி வருகின்றனர்.
Samayam Tamil bigg boss vijaya


அந்த வகையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிக்பாஸ் புகழ் நடிகை விஜயலட்சுமி தனக்கும் சிறுவயதில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறியுள்ளார். பள்ளியில் படிக்கும் போது கராத்தே வகுப்பு சென்றபோது தன்னிடம் ஒரு மாஸ்டர் தவறாக நடக்க முயன்றதாகவும், வீட்டிற்கு வந்தவுடன் தனது தந்தையிடம் இதுகுறித்து புகார் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்