ஆப்நகரம்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது இவர்கள் இருவரில் ஒருவர்!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் இவர்கள் இருவரில் ஒருவர் நிச்சயமாக வெளியேற்றப்படவுள்ளார்.

Samayam Tamil 17 Aug 2018, 5:58 pm
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் இவர்கள் இருவரில் ஒருவர் நிச்சயமாக வெளியேற்றப்படவுள்ளார்.
Samayam Tamil biggboss


பிக்பாஸ் சீசன் 2 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி தொடங்கி தற்போது 60 நாட்களுக்கு மேலாகி விட்டது. வீட்டிலிருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். சென்ற வாரம் பொன்னம்பலம் வெளியேறியுள்ளார். மேலும் இந்த வார வெளியேற்றத்திற்காக ஜனனி, ரித்விகா, டேனியல், சென்றாயன், வைஷ்ணவி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வந்த நிலவரப்படி, ரித்விகா அதிக ஓட்டுகள் வாங்கி முன்னிலையில் இருப்பதாகவும், இரண்டாவது இடத்தில் டேனியலும், கடைசியாக குறைந்த ஓட்டில் வைஷ்ணவியும் இருந்து வருகிறார். இதனால் நிச்சயம் இந்த வாரம் இவர்கள் இருவரில் ஒரவர் அதாவது வைஷ்ணவி அல்லது டேனியல் தான் வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்