ஆப்நகரம்

பிக்பாஸ் ஓட்டு விஷயத்தில் நிர்வாகம் தில்லு முல்லு: பொதுமக்களின் கருத்து!

பிக்பாஸ் ஓட்டு விஷயத்தில் நிர்வாகம் தற்போது தில்லு முல்லு செய்து வருகிறது பொதுமக்கள் கருதி வருகின்றனர்.

Samayam Tamil 29 Sep 2018, 3:54 pm
தமிழ்நாட்டு மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது பிக்பாஸ். இதில் யார் ஜெயிப்பார் மக்களுக்கு பிடித்தவரா? இல்லை பிக்பாஸிற்காக டிஆர்பி வர உதவியவரா என்பது தெரியவில்லை.
Samayam Tamil bigboss


கடந்த சில நாட்களாக இறுதி போட்டியாளர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வந்தனர். இதுநாள் வரை பார்த்ததில் ரித்விகா தான் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருந்தார். அடுத்தபடியாக ஐஸ்வர்யா, விஜி, ஜனனி என மூவரும் இருந்தனர். ஆனால் இன்று அந்த விவரம் ஒளிபரப்பப்படவில்லை. இதனால் பிக்பாஸ் நிர்வாகம் தில்லுமுல்லு செய்வதற்காகவே இன்று வாக்கு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.

ஆனால் ஒருநாள் முன்னரே பிக்பாஸ் ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை ஷூட் பண்ணுவார்கள். இதனால் கணக்கெடுப்பு முடித்துவிட்டார்களோ என்ற சந்தோமும் மக்களிடம் உள்ளது,

அடுத்த செய்தி

டிரெண்டிங்