ஆப்நகரம்

ஒரு காலத்தில் பரம ஏழையாக இருந்தேன் - ’பிக்பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா!

ஒரு காலத்தில் ஒரு புதுதுணிகூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்டோம் என்று ‘பிக்பாஸ்’ நடிகை ஐஸ்வர்யா தத்தா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Jun 2018, 3:56 pm
ஒரு காலத்தில் ஒரு புதுதுணிகூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்டோம் என்று ‘பிக்பாஸ்’ நடிகை ஐஸ்வர்யா தத்தா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Samayam Tamil aishwarya-dutta



நடிகை ஐஸ்வர்யா தத்தா, தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இவர் தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘பாயும் புலி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார்.


இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கில் தன் குடும்பத்தினர் பட்ட கஷ்டம் பற்றி கடிதத்தில் கூறியுள்ளார். ஒரு காலத்தில் அவர் குடும்பம் கடுமையாக வறுமையில் வாடியதாம். ஒரு சமயம் துர்கா பூஜை தினத்தில் அனைவரும் திருவிழா கொண்டாடிகொண்டிருந்தனர்.


இவர் குடும்பத்தினர் யாருக்கும் புது துணி கூடி வாங்க முடியாமல் அப்பா அவ்வளவு பணக் கஷ்டத்தில் இருந்தாராம். கடன் கேட்டும் கிடைக்கவில்லையாம். கடந்த கால நிகழ்ச்சியைப் பேசிக் கொண்டிருக்கும்போது நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்