ஆப்நகரம்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரித்விகா!

படமாக இருந்தாலும், நன்கொடையாக இருந்தாலும், அதை நான் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன் என்று வதந்தி பரப்பியவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ரித்விகா பேசியுள்ளார்.

Samayam Tamil 5 Oct 2018, 1:11 pm
நடிகை ரித்விகா, தற்போது பிக்பாஸ் சீசன் 2வில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு தற்போது அதிகமான பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்ததாக அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அத்துடன் பிக்பாஸ் போட்டியில் கிடைத்த பரிசப் பணம் 50 லட்சத்தை சில நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக கொடுக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
Samayam Tamil rithvika


அதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் நடிகை ரித்விகா டுவிட்டரில், “என்னைப் பற்றிய நிறைய வதந்திகள் என் புதிய படம் மற்றும் பரிசு பணம் நன்கொடை அளிப்பது பற்றி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நான் எது செய்தாலும் அதை உங்களுக்கு தெரியப்படுத்துவேன். அப்படி செய்தால் அதை என் டுவிட்டர் கணக்கில் பதிவிடுவேன்” என்று கூறி வதந்திகளுக்கு ரித்விகா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்