இந்தியன் 2 செட் விபத்து
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. நேற்று இரவு செட் அமைக்கும் பணி நடந்தபோது அங்கிருந்த கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர், 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அம்ரிதா
விபத்து குறித்து அம்ரிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அந்த இடத்தில் பிகில் பட ஷூட்டிங் நடந்தபோது இதே போன்று விளக்கு ஒருவர் மீது விழுந்தது. அதை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். யாரும் அங்கு சென்று மீண்டும் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று விரும்புகிறேன். அல்லது அங்கு யாரும் செல்ல வேண்டாம். அங்கு நிறைய நெகட்டிவ் வைப்ஸ் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Twitter-Amritha
பிகில் விபத்து
பிகில் படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்தபோது கிரேனில் தொங்கிக் கொண்டிருந்த ஃபோகஸ் லைட் அறுந்து விழுந்து எலக்ட்ரீஷியன் செல்வராஜ் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இந்தியன் 2 விபத்தும் அதே இடத்தில் நடந்ததை தான் அம்ரிதா அப்படி ட்வீட் செய்துள்ளார்.
ஈவிபி ஃபிலிம் சிட்டி
அம்ரிதாவின் ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, பொழுதுபோக்கு ராட்டினம் விபத்து, பிக் பாஸ் 2 விபத்து, தளபதி 63 விபத்து, காலா விபத்து, இந்தியன் -2 விபத்து, இன்னும் எவ்ளோ உயிர் பலி வாங்க போகுதோ இந்த #EVP_flimcity_nazarathpettai என்று தெரிவித்துள்ளனர்.