அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள பிகில் படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பிகில் படத்திற்கு எமோஜி கொடுத்து கவுரவம் செய்துள்ளது ட்விட்டர்.
பிகில் கதாபாத்திரம் கையில் பந்துடன் இருக்கும் எமோஜியை விஜய் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். எமோஜியை பார்த்த ரசிகர்கள் குஷியாகி அது குறித்து ஏகப்பட்ட ட்வீட்டுகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
#bigilemoji ட்விட்டரில் டிரெண்டானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ட்விட்டரில் எதையாவது டிரெண்ட் செய்வது என்பது விஜய் ரசிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்று ஆகும்.
Bigil Telugu Release: 50 அடியில் தளபதி விஜய்க்கு கட் அவுட் ரெடி!
முன்னதாக விஜய்யின் மெர்சல், ரஜினியின் காலா, சூர்யாவின் என்ஜிகே ஆகிய தமிழ் படங்களுக்கு எமோஜி கிடைத்தது. அட்லி, விஜய் கூட்டணிக்கு இது இரண்டாவது எமோஜி ஆகும்.
ஒரு பக்கம் எமோஜி, கூடுதல் திரையரங்குகள் என்று சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் படத்திற்கு பிரச்சனையாக உள்ளது. இதையடுத்து பிகில் படம் எந்த பிரச்சனையும் இன்றி ரிலீஸாகி வெற்றி பெற வேண்டி நாகை மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் மாரியம்மன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டுள்ளனர்.
Bigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செல்வா ட்வீட்
விஜய் தன் ரசிகர்களுக்காக ஆசையாக குட்டிக் கதை சொல்லப் போய் அதுவே அவருக்கு கடைசி நிமிடத்தில் பல வழிகளில் இருந்து பிரச்சனையாகி பெரும் தலைவலியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிகில் கதாபாத்திரம் கையில் பந்துடன் இருக்கும் எமோஜியை விஜய் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். எமோஜியை பார்த்த ரசிகர்கள் குஷியாகி அது குறித்து ஏகப்பட்ட ட்வீட்டுகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
#bigilemoji ட்விட்டரில் டிரெண்டானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ட்விட்டரில் எதையாவது டிரெண்ட் செய்வது என்பது விஜய் ரசிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்று ஆகும்.
Bigil Telugu Release: 50 அடியில் தளபதி விஜய்க்கு கட் அவுட் ரெடி!
முன்னதாக விஜய்யின் மெர்சல், ரஜினியின் காலா, சூர்யாவின் என்ஜிகே ஆகிய தமிழ் படங்களுக்கு எமோஜி கிடைத்தது. அட்லி, விஜய் கூட்டணிக்கு இது இரண்டாவது எமோஜி ஆகும்.
ஒரு பக்கம் எமோஜி, கூடுதல் திரையரங்குகள் என்று சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் படத்திற்கு பிரச்சனையாக உள்ளது. இதையடுத்து பிகில் படம் எந்த பிரச்சனையும் இன்றி ரிலீஸாகி வெற்றி பெற வேண்டி நாகை மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் மாரியம்மன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டுள்ளனர்.
Bigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செல்வா ட்வீட்
விஜய் தன் ரசிகர்களுக்காக ஆசையாக குட்டிக் கதை சொல்லப் போய் அதுவே அவருக்கு கடைசி நிமிடத்தில் பல வழிகளில் இருந்து பிரச்சனையாகி பெரும் தலைவலியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.