ஆப்நகரம்

விஜய் பேன்ஸ் கேட்ட அதே கேள்வியை அர்ச்சனாவிடம் கேட்ட வருமான வரித்துறை

பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Samayam Tamil 13 Feb 2020, 2:24 pm
பிகில் படம் தொடர்பான வருமான வரித்துறை சோதனை, பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த சோதனையில் பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்களிலிருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக, விசாரணைக்கு வரும்படி நடிகர் விஜய், பிகில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், அன்புச் செழியன், சுந்தர் ஆறுமுகம் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியது வருமான வரித்துறை.
Samayam Tamil archana kalpati


இந்நிலையில், தற்போது வந்த செய்திகளின்படி, கல்பாத்தி நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி, வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக சென்றிருக்கிறார். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிகில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன், விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம், பைனான்சியர் அன்புச் செழியனுக்கு படத்தில் இருக்கும் பங்கு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக, அர்ச்சனா கல்பாத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், பிகில் குறித்து ட்விட் செய்திருந்தார். அதில் இந்த வருடத்தின் அதிகம் வசூல் செய்த படம் என குறிப்பிட்டிருந்தார். ஆனால், பிகில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்பது குறித்து வெளிப்படையாக எதுவும் அவர் அறிவிக்கவில்லை. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

விஜய் தரப்பில் வழக்கறிஞரும், விஜய்யின் ஆடிட்டருமான அனுபா செழியன் விசாரணைக்கு சென்றிருக்கிறார். விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் இருப்பதால், கடைசி நாள் விசாரணைக்கு வருவதற்காக அனுமதி கேட்டிருந்தாராம்.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு சென்னை திரும்பிவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் எடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்