ஆப்நகரம்

பிந்து மாதவிக்கு என்ன ஆனது? அபார்ட்மெண்ட்டுக்கு சீல்! 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை

பிந்து மாதவி வசித்து வரும் அபார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த முழு கட்டிடமும் சீல் வைக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டு உள்ளது.

Samayam Tamil 1 Jun 2020, 11:47 pm
தமிழ் சினிமாவில் பொக்கிஷம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர் பிந்து மாதவி. அதற்கு பிறகு வெப்பம், கழுகு போன்ற படங்களில் நடித்தார் அவர். அதன் பிறகு பிந்து மாதவி நடித்த கேடி பில்லா, கில்லாடி ரங்கா போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாகவும் அவருக்கு அதிக புகழ் கிடைத்தது. கடைசியாக சென்ற வருடம் வெளிவந்த கழுகு 2 படத்தில் நடித்து இருந்தார் அவர்.
Samayam Tamil Bindhu Madhavi


தற்போது கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார் அவர். தற்போது கொரோனா நேரத்தில் படங்களின் ஷூட்டிங் எதுவும் இலை என்பதால் சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே இருந்துவந்தார் பிந்து மாதவி.

சென்னையில் அதிக அளவில் தினம்தோறும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று ஜூன் 1ம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் 1112 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதில் சென்னையில் உள்ளவர்கள் மட்டும் 964 பேர். இதன் மூலமாக சென்னை நகரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 15770 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில் நடிகை பிந்து மாதவி வசித்துவரும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கட்டிடம் முழுவதும் தனிமை படுத்தப்பட்டு உள்ளது. அதனால் பிந்து மாதவி இன்னும் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தான் இருக்க வேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் கூறியுள்ளார் பிந்து மாதவி. அந்த வீடியோவில் அரசு ஊழியர்கள் அவரது அபார்ட்மெண்ட் கேட் முன்பு தடுப்பு அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Red Zone என வீடியோவில் குறிப்பிட்டுள்ள அவர், அந்த ட்விட்டில் கூறி இருப்பதாவது..

"என்னுடைய அபார்ட்மெண்டில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால் எங்கள் அனைவருக்கும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமை படுத்தப்பட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது" என குறிப்பிட்டு உள்ளார்.


இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பாக இருங்கள் என பலரும் பிந்து மாதவிக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.

பிந்து மாதவி அடுத்து நடித்துவரும் படம் 'யாருக்கும் அஞ்சேல்'. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தினை இயக்கி இருந்த ரஞ்சித் ஜெயகொடி இயக்கும் படம் இது. இதில் இரண்டு பெண் கத்பாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒன்றில் பிந்து மாதவி நடிக்க, மற்றொரு முக்கிய ரோலில் பெங்காலி நடிகை தர்ஷனா பாலிக் நடிக்கிறார்.

ஊட்டியில் முப்பது நாட்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கொரோனா லாக் டவுனுக்கு முன்பு நடைபெற்று வந்தது.

மேலும் 'மாயன்' என்ற படத்திலும் நடித்துள்ளார் பிந்து மாதவி. இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் படம். இதில் தமிழில் மட்டும் பிந்து மாதவி நடிக்கிறார். கடவுள் சிவன் மற்றும் ஆதி காலத்தில் இருந்த மாயன்கள் பற்றியது தான் இந்த படம். மலேஷியாவை சேர்ந்த வினோத் தமிழ் என்பவர் ஹீரோவாக இதில் நடிக்கிறார். இந்த படத்தில் கஞ்சா கருப்பு, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஆங்கிலத்தில் ஹீரோயினை மட்டும் மாற்றி இந்த படத்தினை எடுக்கின்றனர். கஞ்சா கருப்பு உள்ளிட்ட மற்ற நடிகர்கள் ஆங்கில படத்திலும் நடிக்கின்றனர். எப்போதும் காமெடி ரோல்களில் நடித்து வரும் கஞ்சா கருப்பு இதில் ஆங்கிலம் பேசி நடித்துள்ளார் என்பது தான் ஹைலைட்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்