ஆப்நகரம்

பழவேற்காடு ஏரியில் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படப்பிடிப்பு

அஜீத் நடித்த ‘சிட்டிசன்’ படத்திற்குப் பிறகு தற்போது பழவேற்காடு ஏரியில் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

TOI Contributor 28 Jul 2016, 2:14 pm
அஜீத் நடித்த ‘சிட்டிசன்’ படத்திற்குப் பிறகு தற்போது பழவேற்காடு ஏரியில் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
Samayam Tamil bobby simha to don 11 different getups for vallavanukum vallavan
பழவேற்காடு ஏரியில் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படப்பிடிப்பு


‘கோ 2’ படத்தின் மூலம் வணிகரீதியிலான வெற்றியைச் சுவைத்த பாபி சிம்ஹாவிற்கு, சமீபத்தில் வெளிவந்த ‘இறைவி’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘வல்லவனுக்கும் வல்லவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார் சிம்ஹா.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அசால்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் பாபி சிம்ஹா தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்கி வருகிறார் அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு. ‘நெடுஞ்சாலை’ பட புகழ் ஷிவதா மற்றும் பூஜா தேவரியா, கருணாகரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் டீசரானது, வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று வெளியாகிறது.

‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தில் பாபி சிம்ஹா பதினொன்று கெட்டப்பில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, சுமார் பதினைந்து வருடம் கழித்து சென்னையை அடுத்து உள்ள பழவேற்காடு ஏரியில் படமாக்கப்பட்டிருக்கிறது இப்படம். நடிகர் அஜீத்குமார் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புதான் இங்கு கடைசியாக படமாக்கப்பட்ட தமிழ் படம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்