ஆப்நகரம்

போலீசாக நடிக்கும் பாபி சிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

TOI Contributor 21 May 2016, 5:50 pm
நடிகர் பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil bobby simha to play cop in his next tamil telugu bilingual
போலீசாக நடிக்கும் பாபி சிம்ஹா


வில்லன் முதல் போலீஸ் வரை என்பதுபோல, இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரது வெற்றி பாதையாக இருந்திருக்கிறது. ரஜினி முதல் சத்யராஜ்வரை பலரும் வில்லனாக நடித்தே கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளனர். பாபி சிம்ஹாவும் அப்படியே.

‘ஜிகிர்தண்டா’ படத்தில் அவர் நடித்த அசால்ட் சேது கதாபாத்திரமே அவரை பல படங்களில் நாயகனாக்கியது. வில்லனாக பல படங்களில் நடித்தவர் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். ‘கோ 2’ படத்தை இயக்கிய சரத்தின் அடுத்தப் படத்திலும் பாபி சிம்ஹாவே நாயகன். ‘கோ 2‘ பொலிடிகல் த்ரில்லர் என்றால் இந்த புதிய படம் ஆக்ஷன் த்ரில்லர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பாபி சிம்ஹா முதல்முறையாக போலீஸாக நடிக்க உள்ளார். பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்