ஆப்நகரம்

மந்திரவாதி பிடியிலிருந்து நடிகையை மீட்டுத்தர பாட்டி போலீசில் புகார்!

மந்திரவாதி பிடியில் சிக்கியிருக்கும் கவர்ச்சி நடிகை பாபிலோனாவை மீட்டுத் தரக்கோரி பாட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

TOI Contributor 30 Nov 2016, 3:42 pm
மந்திரவாதி பிடியில் சிக்கியிருக்கும் கவர்ச்சி நடிகை பாபிலோனாவை மீட்டுத் தரக்கோரி பாட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
Samayam Tamil bobilonas grandma gave complaint to police station
மந்திரவாதி பிடியிலிருந்து நடிகையை மீட்டுத்தர பாட்டி போலீசில் புகார்!


பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனா பல படங்களில் கவர்ச்சி நடனங்கள் ஆடியவர். இவரது 80 வயது பாட்டி கிருஷ்ணகுமாரி. இவர்கள் இருவரும் சென்னை சாலிக்கிராமத்தில் வசித்து வந்தனர். செவ்வாய்க்கிழமையன்று பாட்டி கிருஷ்ணகுமாரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த மனுவில், ‘‘பாபிலோனாவை நான் தான் வளர்த்து வந்தேன். அவரை திரைஉலகத்திற்கு நடிகையாக அறிமுகப்படுத்தியதும் நான்தான். எனது பேத்தி பாபிலோனா தற்போது மந்திரவாதி சுந்தர் பாபுல்ராஜ் பிடியில் சிக்கியுள்ளார். என் பேத்தியை வசியப்படுத்தி, மந்திரவாதி தனது பிடியில் வைத்துள்ளார். எனது பேத்தியின் நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் அவர் அபகரித்துவிட்டார். அந்த மந்திரவாதி திருமணமானவர். அவரால் எனது பேத்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுப்பற்றி நான் நேரிடையாக சென்று மந்திரவாதியிடம் பேசினேன். எனது பேத்தியை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். ஆனால் அந்த மந்திரவாதி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தவறாகப் பேசினார்.

மந்திரவாதி பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. எனவே எனது பேத்தி பாபிலோனாவை மந்திரவாதியிடம் இருந்து பத்திரமாக மீட்டுத் தரவேண்டும்’’ என்று மனுவில் கோரியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்