ஆப்நகரம்

த்ரில்லர் படத்தில் நடிகை மீரா மிதுன்!

நடிகை மீரா மிதுன், அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Samayam Tamil 6 Apr 2019, 5:07 pm
ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்து வரும் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் நடிகை மீரா மிதுன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படம் த்ரில்லர் கிரைம் சம்பந்தமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பல குறும்படங்களில் நடித்து பிரபலமான தீரஜ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
Samayam Tamil bothai-eri-puthi-mari


மேலும் பிரதைனி சர்வா என்ற மாடல் அழகியும் நடிக்கிறார். படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் நாயகியாக மீரா மிதுன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்திற்கு கே.பி. இசையமைக்கிறார்.

இந்தப் படம் குறித்து மீரா மிதுன் பேசுகையில், “இந்த படம் தடம் திரைப்படம் மாதிரி ரசிகர்களை ஈக்கும். தலைப்புக்கு சம்பந்தத்தை கிளைமாக்ஸில் மட்டுமே பார்க்க முடியும். இயக்குநர் கே.ஆர்.சந்துரு கதை சொன்ன உடனே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்