ஆப்நகரம்

அனுஷ்காவுக்கு மெழுகுச் சிலை...கோலி சிலையில் இல்லாத சிறப்பு இவருக்கு கிடைத்தது!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மேடம் டுசாடஸ் அருங்காட்சியகத்தில் தனது மெழுகுச் சிலையை நடிகை அனுஷ்கா சர்மா திறந்து வைத்தார்.

Samayam Tamil 20 Nov 2018, 10:30 pm
உலகில் உள்ள பிரபலங்களின் மெழுச்சிலையை அச்சு அசல் அப்படியே தயாரிக்கும் நிறுவனம் மேடம் டுசாட்ஸ். இந்நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகம் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்குமெழுகுச் சிலை வைத்துள்ளது.
Samayam Tamil 9

என்ன சிறப்பு:
இந்த சிலையை அனுஷ்கா திறந்து வைத்தார். இந்த சிலை அப்படியே அனுஷ்கா போலவே அச்சு அசலாக உள்ளது. மேலும் மற்ற பிரபலங்களுக்கு கிடைக்காத அளவு சிறப்பு அனுஷ்காவின் சிலைக்கு கிடைத்துள்ளது. இந்த சிலை பேசும். தவிர, கையில் உள்ள கேமரா மூலம் செல்ஃபி எடுக்க முடியும்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் மற்றும் அனுஷ்காவின் கணவரான விராட் கோலியின் சிலையும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ளது. கோலியின் சிலையை விட அனுஷ்கா சிலை சிறப்பாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்