ஆப்நகரம்

ராஜமவுலி படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் கேட்கும் நடிகை?

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க, பரினீத்தி சோப்ரா மிகப் பெரிய தொகை சம்பளம் கேட்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நடிப்பதற்கான ஹீரோயின் தேர்வு செய்யப்படுகிறது.

Samayam Tamil 28 Jan 2019, 6:15 am
ஹைதராபாத்: ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க, பரினீத்தி சோப்ரா மிகப் பெரிய தொகை சம்பளம் கேட்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil parineeti-chopra


பாகுபலி 2 படத்தை தொடர்ந்து ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஆர்.ஆர்.ஆர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் நடிப்பதற்கான ஹீரோயின் தேர்வு செய்யப்படுகிறது. இதற்காக சாரா அலி கான், ஆலியா பட், கியாரா அத்வானி, ராஷி கன்னா ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டது.

இதற்கிடையில் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரினீதி கதைக்கு ஓ.கே., சொல்லிவிட்டதாகவும், ஆனால் மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகையை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாவும் தெரிகிறது. ஆர்.ஆர்.ஆர். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது .

அடுத்த செய்தி

டிரெண்டிங்