ஆப்நகரம்

திருப்பதியில் முதல் திருமண நாளை கொண்டாடிய காதல் ஜோடி தீபிகா படுகோன் – ரன்வீர் சிங்!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் – ரன்வீர் கபூர் ஜோடி இன்று தங்களது முதல் திருமண நாளை திருப்பதியில் கொண்டாடியுள்ளனர்.

Samayam Tamil 14 Nov 2019, 2:37 pm
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் – ரன்வீர் கபூர் ஜோடி இன்று தங்களது முதல் திருமண நாளை திருப்பதியில் கொண்டாடியுள்ளனர்.
Samayam Tamil bollywood couple deepika padukone and ranveer singh celebrates their first wedding anniversary today at tirupathi
திருப்பதியில் முதல் திருமண நாளை கொண்டாடிய காதல் ஜோடி தீபிகா படுகோன் – ரன்வீர் சிங்!


தீபிகா படுகோன்

பாலிவுட்டில் சிறந்த ஜோடியாக இருக்கும் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் இன்று தங்களது முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இதனை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தீபிகா படுகோன் முதல் திருமணநாள் கொண்டாட்டம்!

முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிகப்பு நிற சேலை, கழுத்தில் நெக்லஸ், ஜும்காஸ் அணிந்து கொண்டும் குறைந்த அளவிலே மேக்கப் போட்டுக்கொண்டும் தீபிகா படுகோனே இருந்துள்ளார்.

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடி!

இதே போன்று, ரன்வீர் சிங் குறைந்த அளவில் தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு, தங்கநிறத்திலான குர்தாவும் அணிந்து கொண்டு திருப்பதியில் காதல் மனைவியுடன் வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சிங் திருமணம்!

கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி இத்தாலியில் சிந்தி மற்றும் கொங்கனி சடங்கு முறைப்படி தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தைத் தொடர்ந்து பெங்களூர், மும்பை ஆகிய பகுதிகளில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே கோல்டன் நிற பட்டுப்புடவையில் ஜொலித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்