ஆப்நகரம்

ரஜினிக்கு வில்லன் என்றால் சந்தோஷமாக நடிப்பேன்: பிரபல பாலிவுட் இயக்குநரின் ஆசை!

டிமாண்டி காலனி படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இரண்டாவதாக இயக்கியுள்ள படம் இமைக்கா நொடிகள்.

Samayam Tamil 8 Sep 2018, 5:49 pm
டிமாண்டி காலனி படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இரண்டாவதாக இயக்கியுள்ள படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, ராஷிக்கண்ணா ஆகியோருடன் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புமும் நடித்துள்ளார்.
Samayam Tamil Anurag-Kashyap-1900x-1024x647
ரஜினிக்கு வில்லன் என்றால் சந்தோஷமாக நடிப்பேன்


இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனுராக் காஷ்யம் பேசியதாவது: ருத்ராவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் அஜய்க்கு தான் போய் சேர வேண்டும். அஜய் இன்னும் பெரிய உயரத்தை அடைவார். மகிழ் திருமேனிதான் ருத்ராவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

படத்தில் நடிக்க வந்த பிறகு பல நேரங்களில் ஷுட்டிங் நடக்க முடியாமல் தள்ளிப்போனது. 2 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் இருந்தது, அந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியில் நான் 2 படங்கள், 1 வெப் சீரீஸ் இயக்கி விட்டு வந்தேன்.

நல்ல கதையும் கேரக்டரும் அமைந்தால் மட்டுமே வில்லனாக நடிப்பேன். குறிப்பாக ரஜினிக்கு வில்லன் என்றால் சந்தோஷமாக நடிப்பேன். நடிப்பதை விட எனக்கு படம் இயக்குவதில் தான் மகிழ்ச்சி. விரைவில் நேரடி தமிழ் படம் ஒன்றை இயக்குவேன். இவ்வாறு அனுராக் கஷ்யாப் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்