ஆப்நகரம்

'மசாலா சினிமாவில் மேஜிக் செய்பவர்': அட்லீயை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் இயக்குனர்

அட்லீ இயக்கிய படங்களை பார்த்துவிட்டு அவரை பாராட்டியுள்ளார் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர்.

Samayam Tamil 30 May 2020, 10:15 am
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியவர். ராஜா ராணி படத்திற்கு பிறகு அவர் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களில் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார். அவை மூன்றும் பிரம்மாண்ட ஹிட் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
Samayam Tamil Atlee


அட்லீ இயக்கத்தில் கடைசியாக பிகில் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி இருந்தது. கால்பந்து பற்றிய அந்த படத்திற்கு கலவையான விமர்சனம் தான் கிடைத்தது. ஆனால் அதை எல்லாம் தாண்டி வசூல் 300 கோடிக்கும் அதிகமாக வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த முன்னணி பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோகர் பார்த்து பாராட்டி தள்ளியுள்ளார்.

"அட்லீ இயக்கிய பிகில் படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது. அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட். அவர் இயக்கிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன், அனைத்தும் பிடித்திருந்தது. அட்லீ மசாலா சினிமாவில் மேஜிக் செய்பவர்" என பாராட்டி உள்ளார் கரண் ஜோகர்.

அதற்க்கு நன்றி கூறியுள்ளார் அட்லீ, "நன்றி சார். lots of love" என குறிப்பிட்டு உள்ளார்.


அட்லீ மட்டுமின்றி கரண் ஜோகர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் பற்றியும் பேசி உள்ளார். "வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தையும் பார்த்தேன். கடவுளே, என்னை மெர்சலாக்கியது அது. தனுஷ் சிறப்பாக நடித்திருந்தார். நான் அந்த படத்தை பார்க்கும்போது சீட்டின் நுனியில் தான் இருந்தேன்" என கரண் ஜோகர் கூறியுள்ளார்.

தனக்கு பிடித்த தென்னிந்திய படங்கள் பற்றி பேசும்போது தான் கரண் ஜோகர் இவ்வாறு கூறி உள்ளார்.

பிகில் படத்திற்கு பிறகு அட்லீ எந்த படத்தையும் அறிவிக்காமல் இருக்கிறார். அவரது ஐந்தாவது படம் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் உடன் தான் என சென்ற வருடத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. ஆனால் அது பற்றி தற்போது வரை எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.

கதையில் திருப்தி இல்லாததால் அதில் சில மாற்றங்களை செய்ய சொல்லி ஷாருக்கான் கேட்டார், அதனால் தான் அட்லீ மீண்டும் கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறார் என கூறப்பட்டது.

அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு, அட்லீயின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப்போவது வருத்தத்தை தான் ஏற்படுத்தியுள்ளது.

அட்லீ எப்போதும் படத்தின் பட்ஜெட்டை அதிக பதிவிடுவார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. அவரால் தான் பிகில் படம் 300 கோடி வசூலித்த நிலையிலும் 20 கோடி நஷ்டம் ஏற்பட்டது என சமீபத்தில் வதந்தி பரவியது.

ஆனால் அது உண்மையில்லை என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கரண் ஜோகர் தற்போது தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவரது வீட்டில் பணியாற்றும் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கரண் ஜோகர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரண் ஜோகர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில் அவர்கள் தங்களை 14 நாட்கள் வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்