ஆப்நகரம்

விஜய் சேதுபதி இல்லை, புஷ்பா படத்தில் இவர் தான் வில்லன்?

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வில்லனாக விஜய் சேத்பதி நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Samayam Tamil 13 Apr 2020, 1:54 pm
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் 'புஷ்பா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி வெளிவந்து இந்திய அளவில் வைரலானது. அதற்கு ட்விட்டரில் ஒரே நாளில் 84 ஆயிரம் லைக்குகள் கிடைத்தது.
Samayam Tamil Vijay Sethupathi to play a role with Grey shade in Pushpa


தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது இந்த படம்.

செம்மர கடத்தல் பற்றிய சர்ச்சையான கதையை தான் இயக்குனர் சுகுமார் கையில் எடுத்துள்ளார். படத்தின் ஒரு போஸ்டரில் போலீசுக்கு நடுவில் அல்லு அர்ஜுன் அமர்ந்திருப்பது போல உள்ளது. அருகில் விலையுயர்ந்த செம்மரங்கள் மற்றும் அதை கடந்த பயன்படுத்திய வேனும் இருந்தது. திருமலா அருகில் உள்ள சேஷாசலம் காட்டு பகுதியில் தான் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. அந்த வனப்பகுதியில் செம்மர கடத்தலுக்கு சென்ற பல தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மெயின் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது தான். இருப்பினும் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திமும் நெகடிவ் ஷேட் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

அவர் இதற்கு முன்பு ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் சென்ற ஜனவரியிலேயே கதையை இயக்குனர் கூறியதாகவும், அவரும் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்