ஆப்நகரம்

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

சூர்யா அலுவலகத்தில் குண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என அழைப்பு வந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 28 Sep 2020, 7:39 pm
சூர்யா கோலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Samayam Tamil bomb threat to suriya office shocks fans
நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்


சூர்யா

நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் அவரது அலுவலகம் எப்போது பிஸியாகவே எப்போதும் இயங்கி கொண்டிருக்கும். சூர்யா தன் 2டி தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்த பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட கொடுத்துள்ளார்.

சூரரைப் போற்று படம் வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதனை விளம்பரப்படுத்தும் பணிகளை சூர்யா விரைவில் துவங்க உள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருக்கிறார் அதனைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் வெடிகுண்டு கிடைக்காத காரணத்தினால் வந்த அழைப்பு புரளி என்பது உறுதியாக இருக்கிறது.

மர்ம நபர் யார்?

இன்று மதியம் 12.30 மணிக்கு காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார் நபர் சென்னை ஆழ்வார்பேட்டையில் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்று மட்டும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார். அந்த நபர் யார் என்பது பற்றி விசாரணை தற்போது நடத்தப்பட்டு வருகிறது

இப்படி நடிகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ரஜினிகாந்த், விஜய், அஜித் என பலரது வீடுகளுக்கு சில மாதங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. மர்மநபர்கள் இப்படி அழைப்பு செய்து போலீசாரை அலைய விடுவதும், அதன் பின் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி அதை பற்றி எச்சரித்து அனுப்புவதும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சூர்யா அடுத்த படம்

சூர்யா அடுத்து ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க உள்ளார். அதன்பின் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அவர். இது பற்றிய தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிராஜ் படத்தை முடித்த பிறகு தான் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் சூர்யா நடிக்க துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் துவங்கப்படப்போவது அருவா படமா அல்லது பாண்டிராஜின் படமா என்பது பற்றி இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் அது உறுதியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்