ஆப்நகரம்

கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி ? போனிகபூர் பதில் !!

ஸ்ரீதேவியின் மரணம் 'கொலை' என பரவிய கருத்துக்களுக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார். கேரள டிஜிபி ரிஷி ராஜ் சிங்க் ஸ்ரீதேவியின் மரணம் விபத்தல்ல என்றும், அது கொலையாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.

Samayam Tamil 15 Jul 2019, 2:09 pm
நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் முந்தைய லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கியவர். தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்று இந்தி சினிமாவின் முக்கிய நடிகையாக மாறியவர். கடந்த வருடம் பிப்ரவரி 24 ல் நிகழ்ந்த அவரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை அளித்து இருந்தது.
Samayam Tamil Boney-Kapoor1


துபாயில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சென்றவர் மது போதையில் ஹோட்டல் பாத்ரூமில் குளிக்கும் தொட்டியில் வழுக்கி விழுந்து இறந்ததாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் சில நாட்கள் முன் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த கேரள டிஜிபி ரிஷி ராஜ் சிங்க், ''ஸ்ரீதேவியின் மரணம் விபத்தல்ல. அது கொலையாக இருக்கலாம்'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார்.
அஜித்தை விட அமலாபாலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விநியோகஸ்தர்கள் !!
கேரள சிறை டிஜிபி ரிஷி ராஜ் சிங்க், ஒரு பத்திரிக்கைக்கு எழுதி இருந்த கட்டுரையில், ''மறைந்த என்னுடைய நண்பரும், பிரபல தடவியல் நிபுணருமான டாக்டர் உமாதாதன் என்னிடம், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம். விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்து இருந்தார்'' என்று கூறி இருந்தார்.

இதை உறுதிபடுத்தும் வகையில் சில காரணங்களை எனது நண்பர் தெரிவித்து இருந்தார். எவ்வளவு மது அருந்தி இருந்தாலும், ஒரு அடி மட்டுமே இருக்கும் குளியல் தொட்டியில் யாராலும் விழுந்து இறக்க வாய்ப்பில்லை. இரு கால்களையும் யாராவது பிடித்துக் கொண்டு தலையை தண்ணீரில் மூழ்கடித்து இருந்தால் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

டாக்டர் உமாதாதன் கேரள குற்ற வழக்குகள் பலவற்றில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தன் அறிவாலும் தொழில் திறமையாலும் உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா பற்ற வைத்த நெருப்பு !

ஸ்ரீதேவி போனிகபூர்

ஸ்ரீதேவி இறந்த சமயத்தில் இந்த விசயங்கள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால், அவரது மரணம் விபத்து என்று முடிக்கப்பட்டது.

இப்போது இந்த வழக்கில் கேரள உயரதிகாரியான டிஜிபி ரிஷி ராஜ் சிங்க் கூறியுள்ள கருத்துக்கள் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் 73 வயதில் இறந்த டாக்டர் உமாதாதன் கேரளாவின் மிக முக்கிய நபராக விளங்கியவர். பல சிக்கலான வழக்குகளில் கேரள அரசுக்கு குற்றவாளிகளை பிடிக்க உதவியவர் என்றும் ரிஷி கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் இருக்க ஆசைப்படுகிறேன் - ராதிகா ஆப்தேயின் அதிரடி பேச்சு !!
இந்த விஷயம் மீடியாக்களில் மீண்டும் பரபரப்பாக, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், ''இது மாதிரியான முட்டாள் தனமான கருத்துக்களுக்கு நான் பதில் கொடுக்க விரும்பவில்லை. இம்மாதிரியான வதந்திகள் வந்து கொண்டேதான் இருக்கும். இதற்கெல்லாம் நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒருவருடைய கற்பனை கதை மட்டுமே'' என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்