ஆப்நகரம்

கோவா சர்வதேச திரைப்பட விழா: மனைவி ஸ்ரீதேவிக்கு குறித்து போனி கபூர் உருக்கம்

கோவா திரைப்பட விழாவில் மனைவி ஸ்ரீதேவி குறித்து போனி கபூர் உருக்கமாக பேசினார்.

Samayam Tamil 25 Nov 2018, 12:06 pm
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து அவரது கணவர் போனி கபூர் கண்ணீருடன் நிகழ்த்திய உரை பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
Samayam Tamil 657211-sridevi-boney-kapoor-crop
திரைப்பட விழாவில் ஸ்ரீதேவி குறித்து போனி கபூர் உருக்கமான பேச்சு


உறவினர் இல்ல திருமண விழாவுக்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். பிறகு, இந்தியா வந்த அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கோவா மாநிலம் பனாஜியில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது போனிகபூரிடன், ஸ்ரீதேவி இல்லாத நாட்களை குறித்தும், குழந்தைகளை பராமரிப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த போனி கபூர், என்ன நடந்து என்பதை இன்னும் என்னால் உணரமுடியவில்லை. எனது நான்கு குழந்தைகளும் தான் உறுதுணையாக இருந்து வருகின்றனர் என்று கூறினார்.

அந்த கொடுமையான தருணத்துக்குப் பின் ஏற்பட்ட வடு, தமது 4 குழந்தைகளும் ஒன்று சேர்ந்திருப்பதைக் கண்டபோது ஆறுதலளித்ததாகக் கூறியபோது அவர் மனமுடைந்து அழுதார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்