சூர்யாவுடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறார் ‘புருஸ்லீ’ பட நாயகி கிர்த்தி கர்பந்தா.
நடிகை கிர்த்தி கர்பந்தா தற்போது ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக ‘புருஸ் லீ’ படத்தில் நடித்துள்ளார். படத்தை பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். படம் இன்னும் வெளியாகவில்லை. கிர்த்தி கர்பந்தா ஏற்கெனவே கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘புரூஸ் லீ’ தான் முதல் படம். இவர் பார்ப்பதற்கு நடிகை தமன்னா மாதிரியே இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். நடை, உடை, பாவணை அனைத்தும் தமன்னா அசப்பில் நியாகப்படுத்துகிறது. புரூஸ் லீ படம் பொங்கல் விருந்தாக வருகிற ஜன., 12-ம் தேதி ரிலீஸாக உள்ளது. கிருத்தி கார்பந்தா நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில், தான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‘’என் குடும்பத்தில் யாரும் சினிமாவோடு தொடர்பு உடையவர்கள் கிடையாது. நான் தான் முதன்முதலாக சினிமாவிற்கு வந்துள்ளேன். ஏற்கனவே கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளேன். தமிழில் மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை. மேலும் சூர்யாவுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று துடிக்கிறேன். என் திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். தமிழில் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை’’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகை கிர்த்தி கர்பந்தா தற்போது ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக ‘புருஸ் லீ’ படத்தில் நடித்துள்ளார். படத்தை பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். படம் இன்னும் வெளியாகவில்லை. கிர்த்தி கர்பந்தா ஏற்கெனவே கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘புரூஸ் லீ’ தான் முதல் படம். இவர் பார்ப்பதற்கு நடிகை தமன்னா மாதிரியே இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். நடை, உடை, பாவணை அனைத்தும் தமன்னா அசப்பில் நியாகப்படுத்துகிறது. புரூஸ் லீ படம் பொங்கல் விருந்தாக வருகிற ஜன., 12-ம் தேதி ரிலீஸாக உள்ளது. கிருத்தி கார்பந்தா நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில், தான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‘’என் குடும்பத்தில் யாரும் சினிமாவோடு தொடர்பு உடையவர்கள் கிடையாது. நான் தான் முதன்முதலாக சினிமாவிற்கு வந்துள்ளேன். ஏற்கனவே கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளேன். தமிழில் மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை. மேலும் சூர்யாவுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று துடிக்கிறேன். என் திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். தமிழில் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை’’ என்று தெரிவித்துள்ளார்.