ஆப்நகரம்

இந்து மதத்தை விமர்சித்து பேசியதாக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு !

இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Aug 2018, 5:38 pm
இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Samayam Tamil 1527767681_prakash-raj


பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரண் என்பவர், நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூர் 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு பேசும்போது, இந்து மதத்தையும் இந்து கடவுளையும் மற்றும் வழிபாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்துக்கள் கடவுளாக போற்றி வணங்கும் பசுவையும் விமர்சனம் செய்து வருகிறார். அவரது பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறது.

தொடர்ந்து இதுபோன்ற பேசி வரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 25 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்