ஆப்நகரம்

செவித்திறன் பாதிப்பு.. அவதூறு பரப்பினார்: விஜய் சேதுபதிக்கு எதிராக வழக்கு!

நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Dec 2021, 9:09 am
கடந்த நவம்பர் மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் அடையாளம் தெரியதாக நபரால் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது. இதனை தொடர்ந்து அவரை தாக்கிய நபர் யார் என்ற மகா காந்தி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் இவர் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil Vijay Sethupathi
Vijay Sethupathi


இது தொடர்பான மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்குதல் நடத்தியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

'வெந்து தணிந்தது காடு' அப்டேட்: அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகுங்க சிம்பு ரசிகர்களே..!
இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும், உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் இருந்து அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்