ஆப்நகரம்

ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை; விஸ்வரூபம் எடுக்கும் ’சர்கார்’!

சென்னை: தேச துரோக சட்டப்பிரிவில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Nov 2018, 2:54 pm
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘சர்கார்’. கள்ள ஓட்டு என்பதை மையக்கருவாகக் கொண்டு, தற்கால அரசியல் சூழலை விமர்சித்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதை திருட்டு விவகாரம் நீதிமன்றம் வரை சென்று சமரசம் ஆனது.
Samayam Tamil ARMurugadoss


இதையடுத்து திரையரங்குகளில் தீபாவளிக்கு வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த அதிமுகவினர், தங்கள் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் மற்றும் விமர்சனங்கள் இருப்பதாக குற்றம்சாட்டினர்.

மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் படத்தை தமிழகம் முழுவதும் முடக்குவோம் என்று அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக அமைச்சர்கள் சிவி சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், கேபி அன்பழகன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சமூக நலனை சீர்குலைக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராக பொதுமக்களை வன்முறைக்கு தூண்டும் வகையிலும் சர்கார் படம் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். இது தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்