ஆப்நகரம்

சினிமாத்துறையிலும் தலைதூக்கிய கந்துவட்டி; தயாரிப்பாளர் தற்கொலைக்கு நீதிகேட்கும் சசிகுமார்!

இணை தயாரிப்பாளர் அஷோக் குமார் தற்கொலை தொடர்பாக, காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 22 Nov 2017, 12:24 am
சென்னை: இணை தயாரிப்பாளர் அஷோக் குமார் தற்கொலை தொடர்பாக, காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil case filed against financier anbu regarding producer ashok kumar suicide
சினிமாத்துறையிலும் தலைதூக்கிய கந்துவட்டி; தயாரிப்பாளர் தற்கொலைக்கு நீதிகேட்கும் சசிகுமார்!


நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அஷோக் குமார். இவர் இணை தயாரிப்பாளராகவும், சசிகுமார் பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் இருந்தார். இந்நிலையில் அவர் சென்னை வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் பைனான்சியர் அன்புச் செழியன் மூலம் கந்துவட்டி கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சசிகுமார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்துவட்டி கொடுமையால் அனாதையான குடும்பங்களில் அஷோக் குமாரின் குடும்பமும் சேர்ந்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகின் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Case filed against financier Anbu regarding Producer Ashok Kumar suicide.

அடுத்த செய்தி

டிரெண்டிங்