ஆப்நகரம்

இளையாராஜா இசை நிகழ்ச்சிக்கு தடையா?

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Aug 2019, 10:09 am
தமிழிக மக்களிடையே இசைஞானி என்று புகழப்படும் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழில் 1000 படங்களுக்கு மேல் 7000 பாடல்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். தமிழரகள் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் இளையராஜா. இவரது இசை ஒலிக்காத இடம் தமிழகத்தில் இல்லை எனலாம்.
Samayam Tamil Raja Music


சமீப காலங்களில் அவர் சினிமா படங்களுக்கு அதிகமாக இசையமைப்பதில்லை. அவரது இசை நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. ஆகஸ்ட் 25ல் திருச்சியில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தடைகோரி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read This: Aamir Khan: அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?

மேலும் படிக்க: ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood)

இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சிக்கி தவிக்கும் மஞ்சு வாரியர்!

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தில் குளத்தை ஆக்கிரமித்து நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதாக ஆட்சியரிடம் மனு அளிக்க்ப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் மீது ஏற்கனவே நிறைய புகார்கள் உள்ள நிலையில் மீண்டும் இந்நிறுவனம் புகாரில் சிக்கியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து நிகழ்ச்சிக்கு தடை கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றியமைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்