ஆப்நகரம்

நடிகை பானுப்பிரியா வழக்கில் அதிரடி; வீட்டில் பணியாற்றிய சிறுமி மீது வழக்குப்பதிவு!

சென்னை: நகை, பணம் திருடியதாக சிறுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Jan 2019, 9:04 pm
சென்னை தி.நகரில் விஜயராகவா சாலையில் நடிகை பானுப்பிரியாவின் வீடு அமைந்துள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த 16 வயது சிறுமி பணியமர்த்தப்பட்டார். இது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை மீறிய செயலாகும்.
Samayam Tamil Bhanupriya


இந்நிலையில் பணியாற்றிய சிறுமி, தனது வீட்டிலுள்ள பொருட்களை திருடியதாக பானுப்பிரியா சமீபத்தில் போலீசில் புகார் தெரிவித்தார். அதேசமயம் சிறுமியின் தாயார், ஆந்திர மாநில காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், தனது மகளை துன்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை மீட்டு கெல்லீஸ் சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சூழலில் நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், 15 சவரன் நகை, ஒன்றே கால் லட்ச ரூபாய் பணம், ஒரு ஐபேடு, ஒரு கேமிரா, விலையுயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை சிறுமி திருடிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில் சம்பந்தப்பட்ட சிறுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்