ஆப்நகரம்

வருமானத்தை மறைத்த த்ரிஷா மீது மீண்டும் வழக்கு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

த்ரிஷா வழக்கு மீது மேல்முறையீடு செய்து வருமான வரித்துறை மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.

TNN 8 Jun 2017, 1:47 pm
த்ரிஷா வழக்கு மீது மேல்முறையீடு செய்து வருமான வரித்துறை மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.
Samayam Tamil case on tamil actress trisha made by income tax department
வருமானத்தை மறைத்த த்ரிஷா மீது மீண்டும் வழக்கு! அதிர்ச்சியில் ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் த்ரிஷா. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2010 – 2011ம் ஆண்டு வருமானத்தை மறைத்ததற்காக வருமான வரித்துறை 1.11 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து த்ரிஷா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறை விதித்த அபராத தொகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து த்ரிஷா வழக்கின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து த்ரிஷா மீது வழக்கு தொடர்வதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Case on Tamil actress trisha made by income tax department in chennai highcourt

அடுத்த செய்தி

டிரெண்டிங்